எபேசியர் 3:20  இவ்வாறு தேவனின் சகல முழுமையிலும் நீங்கள் நிறைக்கப்படுவீர்கள். நாம் கேட்பதைவிடவும், நினைப்பதைவிடவும் தேவன் நமக்கு மிகுதியாகச் செய்யத்தக்கவர். தேவன

 

சங்கீதம் 139:1-4 

கர்த்தாவே, நீர் என்னை சோதித்தீர்.

    என்னைப் பற்றிய எல்லாவற்றையும் நீர் அறிகிறீர்.

நான் உட்காரும்பொழுதும் எழும்பொழுதும் நீர் அறிகிறீர்.

    வெகுதூரத்திலிருந்தே எனது எண்ணங்களை நீர் அறிகிறீர்.

கர்த்தாவே, நான் போகுமிடத்தையும் நான் படுக்கும் இடத்தையும் நீர் அறிகிறீர்.

    நான் செய்யும் ஒவ்வொன்றையும் நீர் அறிகிறீர்.

கர்த்தாவே, நான் சொல்ல விரும்பும் வார்த்தைகள்

    என் வாயிலிருந்து வெளிவரும் முன்பே நீர் அறிகிறீர்.

 

 

மத்தேயு 6:8 

அவர்களைப் போல இருக்காதீர்கள். உங்கள் பிதா நீங்கள் கேட்பதற்கு முன்னரே உங்களின் தேவைகளை அறிவார்.

 

 

சங்கீதம் 8 

கித்தீத் என்ற இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்குத் தந்த தாவீதின் சங்கீதம்

எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது நாமம் பூமியின் எல்லா இடத்திலும் மிகுந்த அற்புதமானது!

    விண்ணுலகிலும் உமது நாமம் உமக்குத் துதிகளைக் கொண்டு வருகிறது.

பிள்ளைகள், குழந்தைகள் வாயிலுமிருந்து உம்மைத் துதிக்கும் பாடல்கள் வெளிப்படும்.

    உம் பகைவரை அமைதிப்படுத்த இவ்வல்லமையான பாடல்களைக் கொடுத்தீர்.

கர்த்தாவே, உமது கைகளால் நீர் செய்த வானங்களை நான் கண்டேன்.

    நீர் படைத்த நிலாவையும், நட்சத்திரங்களையும் நான் கண்டு ஆச்சரியமடைந்தேன்.

ஏன் மனிதர்கள் உமக்கு முக்கியமாயினர்?

    ஏன் அவர்களை நீர் நினைவுகூருகிறீர்?

    ஏன் அவர்களைக் கவனிக்கிறீர்?

ஆனால் மனிதர்கள் உமக்கு முக்கியமாயினர்!

    அவர்களை ஏறக்குறைய தேவர்களைப் போலவே உண்டாக்கினீர்.

    மனிதரை மகிமையாலும், மேன்மையாலும் முடிசூட்டினீர்.

நீர் உண்டாக்கின எல்லாவற்றிற்கும் அவர்களை அதிகாரிகளாக வைத்தீர்.

ஆடுகள்,பசுக்கள், காட்டு மிருகங்கள் அனைத்தையும் மனிதர்கள் ஆண்டனர்.

வானத்துப் பறவைகளையும்

    சமுத்திரத்தில் நீந்தும் மீன்களையும் அவர்கள் ஆண்டனர்.

எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது நாமம் உலகத்தில் எங்கும் மிகவும் மிகவும் அற்புதமானது!