சங்கீதம் 37:1 தீயோரைக் கண்டு கலங்காதே, தீய காரியங்களைச் செய்வோரைக்கண்டு பொறாமைகொள்ளாதே.

தாழ்மையான ஜனங்கள் அனுபவிப்பார்கள்

சங்கீதம் 37 

 

37 

தீயோரைக் கண்டு கலங்காதே,

    தீய காரியங்களைச் செய்வோரைக்கண்டு பொறாமைகொள்ளாதே.

விரைவில் வாடி மடிந்துபோகும் புல்லைப்போன்று

    தீயோர் காணப்படுகிறார்கள்.

கர்த்தரை நம்பி நல்லவற்றைச் செய்தால்,

    பூமி கொடுக்கும் பல நற்பலன்களை நீங்கள் அனுபவித்து வாழுவீர்கள்.

கர்த்தருக்குச் சேவைசெய்வதில் மகிழுங்கள்.

    அவர் உங்களுக்குத் தேவையானவற்றைக் கொடுப்பார்.

கர்த்தரைச் சார்ந்திருங்கள், அவரை நம்புங்கள்,

    செய்யவேண்டியதை அவர் செய்வார்.

நண்பகல் சூரியனைப்போன்று

    உன்னுடைய நற்குணத்தையும் நீதியையும் பிரகாசிக்க செய்வாராக.

கர்த்தரை நம்பு, அவர் உதவிக்காகக் காத்திரு.

    தீயோர் வெற்றியடையும்போது கலங்காதே.

    தீய ஜனங்கள் கொடிய திட்டங்களை வகுக்கும்போதும், அதில் அவர்கள் வெற்றியடையும்போதும் கலங்காதே.

கோபமடையாதே!

    மனக்குழப்பமடையாதே. தீய காரியங்களைச் செய்ய முடிவெடுக்குமளவிற்கு நீ கலக்கமடையாதே!

ஏனெனில் தீயோர் அழிக்கப்படுவார்கள்.

    ஆனால் கர்த்தருடைய உதவியை நாடும் ஜனங்கள் தேவன் வாக்களித்த தேசத்தைப் பெறுவார்கள்.

10 

இன்னும் சில காலத்திற்குப்பின் தீயோர் இரார்.

    அந்த ஜனங்களைத் தேடிப் பார்க்கையில் அவர்கள் அழிந்துபோயிருப்பார்கள்.

11 

தேவன் வாக்களித்த தேசத்தை தாழ்மையான ஜனங்கள் பெறுவார்கள்.

அவர்கள் சமாதானத்தை அனுபவிப்பார்கள்.